Subscribe Us

பூனைக்காலி

 பூனைக்காலி







பூனைக்காலி விதை என்பது வெப்பமயமான மண்டலங்களில் வளரக்கூடியது. இதன் பூவானது காய்த்து ஒவ்வொரு காயிலும் 7 விதைகள் இருக்கும். காய்களின் மேல் மென்மையான மெத்தென்ற சுனை இருக்கும். அதனாலே இது வெல்வெட் பீன் என்றழைக்கப்படுகிறது. 

இவை மென்மையாக இருந்தாலும் உடலில் பட்டால் இவை நமைச்சலை உண்டாக்கும்.

நரம்புத்தளர்ச்சி பொடி தயாரிக்கும் முறை

பூனைக்காலி விதை, தண்ணீர்விட்டான் கிழங்கு, நிலப்பனை கிழங்கு, நத்தை சூரி விதை, சாலாமிசிரி, சிறுபீளை, அமுக்கிரான் கிழங்கு போன்றவற்றை சம அளவு எடுத்து சுத்தம் செய்து இடித்து, பொடியாக்கி கொள்ளவும். தினமும் அரை டீஸ்பூன் அளவு எடுத்து அரை டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து தொடர்ந்து 21 நாட்கள் வரை இதை எடுத்துகொள்ள வேண்டும். சிலருக்கு நரம்புத் தளர்ச்சியால் கைகால் நடுக்கமாக இருக்கும். இவர்கள் 21 நாட்கள் வரை நரம்புத்தளர்ச்சி பொடி பயன்படுத்தினால் நரம்புத்தளர்ச்சி குணமாகும்.


ஆண்மை பெருக்கும்

பூனைக்காலி விதை, சிறு நெருஞ்சில் விதை,தண்ணீர் விட்டான் கிழங்கு,நெல்லி அனைத்தையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியுடன் சீந்தில் பொடி, நாட்டுச்சர்க்கரை கலந்து தேனில் குழைத்து காலை மாலை என இரண்டு வேளையும் பாலில் கலந்து குடித்து வந்தால் ஆண்மை பெருகும். விந்து நீர்த்து போவது குறையும். தாது விருத்தியை அதிகரிக்கும். இவை நரம்புகளை வலுவாக்கி ஆண்மை பாதிப்பை சரிசெய்யகூடியது.

​பூனைக்காலி விதை உருண்டை


பூனைக்காலி விதையை மருந்தாக எடுக்காமல் ஸ்நாக்ஸ் உருண்டையாக எடுத்துகொள்ளலாம்.

பொட்டுக்கடலை - 250 கிராம்
பூனைக்காலை விதை- 50 கிராம்
கேழ்வரகு மாவு -ஒரு தேக்கரண்டி,
பனைவெல்லம் - இனிப்புக்கேற்ப,
தேங்காய்த்துருவல் - 2 தேக்கரண்டி,
நெய் - தேவைக்கேற்ப,
உலர் பருப்புகள் - தேவையெனில்

செய்முறை

வாணலியில் பூனைக்காலி விதை சேர்த்து வறுத்து அதனுடன் பொட்டுக்கடலை, கேழ்வரகு அனைத்தையும் சேர்த்து வறுத்து தட்டில் கொட்டி ஆறவிடவும். வெல்லத்தைப் பொடித்து வைக்கவும்.

நெய் விட்டு உலர் பருப்புகளை ஆறியதும் மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக பொடித்து அதனுடன் பொடித்த வெல்லம், தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து நெய் விட்டு உருண்டையாக்கி பிடிக்கவும். சத்தான சுவையான உருண்டை தயார்.

இதை பூப்படைந்த பெண்களும் வயது வந்த ஆண்களும் குடித்து வந்தால் போதும். நல்ல ஆரோக்கியம் பெறுவார்கள்.

குறிப்பு மருத்துவ ரீதியில் தொடர்ந்து சுயமாக நீங்களாகவே இதை எடுத்துகொள்ள கூடாது. சித்த மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துகொள்ள வேண்டும்.

எட்டி

எட்டி

 எட்டி -ஸ்ட்ரைகோனஸ்



காட்டு விலங்குகள், நரிகள், மற்றும் கொறித்துண்ணிகள் உட்பட பல வகையான பாலூட்டிகளைக் கொல்ல உணவாக  பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது


புற்றுநோய் மற்றும் இதய நோய் உள்ளிட்ட பரந்தளவிலான பல நோய்களுக்கு சிகிச்சையாக இருப்பது ஸ்ட்ரைகோனஸ் மூலிகை மருத்துவத்தில் ஊக்குவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், எந்தவொரு நிபந்தனையுமின்றி இது பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை

கார்போகி

கார்போகி






வேறு பெயர்கள்
  • குஷ்ட நாசினி
  • சோமவள்ளி

நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் இந்த கார்போக அரிசி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டவை
  • நரம்புகளுக்கு வலுவூட்டும்.
  • இருமலை குறைக்கும் .
  • ஜீரணத்திற்கு உதவும்.
  • மலச்சிக்கல்,மூலவியாதிகளுக்கும் மருந்தாகும் .
  • ரத்த சர்க்கரை அளவை குறைக்கும்.

வெண்புள்ளி, வெண்குஷ்டம் போன்ற தோல் நோய்கள் சரியாக கார்போக அரிசி பயன்படுத்தப்படுகிறது

இதனை குளியல் தூளாகவும் பயன்படுத்துகின்றனர்.

HAPPY UGADHI- SMS GREETINGS

 HAPPY UGADHI- SMS GREETINGS.




May this New Year brings with it a pot of full of luck and joy for you and your family.
Happy Ugadi

It is time to put the past behind you and look ahead with optimism.
Happy Ugadi!

On the auspicious occasion of Ugadi,
I pray to God that he may give you good health and success.
Wishing you a life full of utmost peace and joy.
Happy Ugadi!

May this Ugadi bring you joy, health, wealth and good luck through out the year!




Ugadi Wishes
As the New year ushers in...
Here's wishing your way...
A joyous festival..
May happiness and prosperity come to you in abundance..
Happy Ugadi!







May this Ugadi bring in you the brightest and choicest happiness and love you have ever wished for.
May this Ugadi bring you the utmost in peace and prosperity.
May lights triumph over darkness.
May peace transcend the earth.
Happy Ugadi!

Wish your new year brims with a harvest of happiness and prosperity.
Happy Ugadi!

May this Ugadi bring you new spirit, new beginning and new prosperity.
Wishing you a very happy Ugadi!

கழற்சிவிதை

 கழற்சிவிதை





 இந்த கழற்சிக்காயை தென்மாவட்டங்களில் தெலுக்காய் என்றும் அழைப்பர்.

  • புதிதாக அரைத்து தூளாக்கப்பட்ட கழற்சிக்காய் தூளை தினமும் சிறிதளவு நீர் விட்டு குழைத்து ஆறாத புண்கள், காயங்கள் மீது பற்றிட்டு வர அவை சீக்கிரம் குணமாகும்.
  • கழற்சிக்காய் இலைகள், விதைகள் போன்றவற்றை மைய அரைத்து வீக்கம் ஏற்பட்ட இடங்களில் மேற்பூச்சாக தொடர்ந்து பூசி வந்தால் வீக்கங்கள் விரைவில் குறையும்.
  • கழற்சிக்காயின் இலைகள் மற்றும் விதைகளை அரைத்து செய்யப்பட்ட தூளை சிறிதளவு நீரில் கலந்து பருகி வர வயிற்று கோளாறுகள் நீங்கும்.
  • கழற்சி கொடியின் காம்புகளை பக்குவம் செய்து சாப்பிடும் போது நமது ஈரல் பலம் பெறும்
  • ஆண்கள் உடல்நலம்: விளக்கெண்ணெயில் கழற்சி சூரணத்தை போட்டு காய்ச்சி, வடிகட்டப்பட்ட தைலத்தை வீக்கம் ஏற்பட்டுள்ள விரைகள் மீது மேல்பூச்சு மருந்தாக தடவி வந்தால் விரைவீக்கம் நீங்கும்.


ஏலம்

ஏலம்

ஏலம்




ஏலம் (Elettaria cardamomum) என்னும் மருந்துச்செடி இஞ்சிச் செடிக் குடும்பத்தைச் (Zingiberaceae) சேர்ந்த ஒரு செடியினம்.


நன்மைகள்


  • ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தும். 
  • சுவாச கோளாறுகளை போக்கும் சக்தியும் ஏலக்காய்க்கு உள்ளது.
  • ஆஸ்துமா நோயாளிகளுக்கும் ஏற்றது. 
  • ஏலக்காய் வாய் சுகாதாரத்திற்கும், வாய் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. பல் வலி, ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்தலாம்.
  • வாகனங்களில் பயணிக்கும்போது தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படுபவர்கள் இரண்டு ஏலக்காயை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தால் இந்த தொல்லை ஏதும் ஏற்படாது.
  • ஜலதோஷம், இருமல், தொடர்ச்சியான தும்மலால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காய் கஷாயம் பருகவேண்டும்.
  • ஏலக்காயில் தயாரிக்கப்படும் எண்ணெய் சரும நலனுக்கு ஏற்றது. குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் அஜீரணத்தால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிடலாம். 
  • ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். ‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம்.
  • நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல் வ‌ந்து, அடி‌க்கடி இரு‌மி வ‌யி‌ற்றுவ‌லி வ‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம் கூட ஏல‌க்கா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமையு‌ம்.

சீமையகத்தி

சீமையகத்தி

 சீமையகத்தி



வேறு பெயர்கள்
  • வண்டுகொல்லி 
  • மலைத்தகரை
  • பேயகத்தி
  • வண்டுக்கடியிலை

சீமையகத்தி அல்லது வண்டுகொல்லி வெப்ப மண்டலங்களில் வளரும் ஒரு நிலைத்திணை ஆகும். 

உயிரியல் வகைப்பாட்டு இலத்தீன் பெயர் சென்னா அலாட்டா. பழையப் பெயர், கேசியா அலாட்டா என்பதாகும்.


தோல் நோய்கள், கழிச்சலைக் கட்டுப்படுத்தும்; படர் தாமரையையும் குணமாக்கும். படர் தாமரை குணமாக சீமையகத்தி வேரை, எலுமிச்சம்பழச் சாறுவிட்டு அரைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் பூச வேண்டும்.

பூவரசு

  பூவரசு 






பயன்கள் 
பூவரசங்காய்களை உடைத்தால் மஞ்சள் நிறமான ஒரு திரவம் கசியும். இதனை எடுத்து அடிபட்ட காயங்கள், விஷக்கடிகள், சரும நோய்களான படர்தாமரை, செதில்படை, சிரங்கு இவைகளுக்குத் தடவி வர இளிதில் குணம் கிடைக்கும்.

பூவரசு மரப்பட்டை 210 கிராம் எடுத்து இடித்து ஒரு சட்டியிலிட்டு, 1400 மி.லி. நீர் விட்டுக் காய்ச்சி மூன்றில் ஒன்றாக வற்றியபின் வடிகட்டி, தினமும் இரண்டு வேளை அருந்தி வந்தால் காணாக் கடி விஷம், பாண்டு, சோகை, பெருவயிறு முதலிய நோய்கள் குணமாகும்.

பூவரசு பட்டையை எடுத்து பாலில் அவித்து உலர்த்தி அதனுடன் சம அளவு பறங்கிப் பட்டை சேர்த்து நன்கு இடித்து சூரண்ம் செய்து கொள்ள வேண்டும். இதனைஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தேவையான அளவு பசு வெண்ணெயில் காலை,மாலை இரண்டு வேளை உண்டு வந்தால் நாட்பட்ட தொழு நோய்க்கு நன்மை பயக்கும். இதை உட்கொள்ளும் போது உணவில் உப்பை நீக்க வேண்டும்.

பூவரசங்காயிலிருந்து முறைப்படி எடுக்கப்படும் எண்ணெய் பெருவயிறு, வயிற்றுப்புண் இவைகளுக்கு சிறந்த மருந்தாகும்.

பூவரசம் பட்டையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை தேவையான அளவு உள்ளுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய் குணமாகும்.

நூறு வருடமான பூவரச மரத்தின் வேரை நன்கு உலர்த்திப் பொடி செய்து முறைப்படி உண்டு வந்தால் தொழுநோய் குணமாகும்.

வெண்குஷ்ட நோயால் உதட்டில் ஏற்பட்ட வெண்புள்ளிகளைப் போக்க பூவரசின் முதிர்ந்த பட்டையை இடித்துப் பிழிந்த சாற்றினை வாயிலிட்டு அடிக்கடி கொப்பளிக்க வேண்டும். இது போல் பல தினங்கள் கொப்பளித்து வரவேண்டும். அந்தச் சாற்றை விழுங்கி விட்டால் வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும்.

இதன் பழுப்பு இலையை உலர்த்திக் கருக்கித் தேங்காய் எண்ணெயில் கலந்து போட சொறிசிரங்கு, கரப்பான்,ஊரல், அரிப்பு குணப்படும்.

இலைகளை அரைத்து வதக்கிக் கட்ட வீக்கம் குறையும்.

100 ஆண்டுகள் சென்ற மரத்தின் காய், பூ, பட்டை ஆகியவற்றைச் சமனளவு பொடித்துக் காலை, மாலை 1 தேக்கரண்டி நீண்ட நாள் சாப்பிட்டுவரத் தோல் வியாதிகள் அனைத்தும் தீரும்.

பூவரசன் பட்டைத்தூள் 100 கிராம், சீமைக்காசிக்கட்டி 100 கிராம், இந்துப்பு 100 கிராம், சேர்த்து அரைத்து வைக்கவும்.குழந்தை வேண்டாம் என்பவர்கள் கருத்தடைக்காக இதனைச் சாப்பிடலாம். விலக்கான நாள் முதல் ஏழு நாள் 10 கிராம் அளவு வெந்நீரில் குடிக்கவும். ஏழு நாளும் பால், மோர், மிளகு ரசம், பருப்புத் துவையல் மட்டும் சாப்பிடவும். நல்லெண்ணெயில் தலை முழுகவும். இதனால் கருப்பை சுருங்கிவிடும்.. ஒரு வருடம் வரை கரு தரிக்காது நல்ல கருத்தடை முறை இது.

பூவரசம் வேர்ப்பட்டையை நீர் விட்டுக் காய்ச்சி 50 மி.லி.யுடன் 10 மி.லி. ஆமணக்கெண்ணெய் சேர்த்து காலை வெறும் வயிற்றில் குடிக்க பேதியாகும். பேதி நிற்க மோர் குடிக்கவும். இதனால் சொறி, சிறங்கு, படை நோய்கள் குணமாகும்.
புங்கை

புங்கை

 புங்கை



வேறு பெயர்கள்
  • புங்கை 
  • புங்கு 
  • பூந்தி 
  • கிரஞ்ச மரம்


  • புங்கை மரப்பட்டையை ஒன்றிரண்டாக இடித்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வர மூல நோய் தீரும்.
  • புங்கம் வேர், மிளகு, திப்பிலி, சீந்தில் இலை, மகிழவேர் இவற்றை சம அளவு எடுத்து கற்றாழை சாற்றால் அரைத்து சிறு உருண்டையளவு உட்கொள்ள எலி கடியினால் ஏற்படும் விஷம் முறியும்.
  • புங்கன் மர இலையை இடித்து சாறு பிழிந்து 30 முதல் 60 மில்லி அளவு குடித்து வர அல்சர் எனப்படும் வயிற்றுப்புண் மற்றும் அதனால் ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.

காயம்

புங்கன் இலையை தூளாக்கி விளக்கெண்ணெய் விட்டுக் காய்ச்சி, அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து தடவி வர காயம் ஆறும். 

வெட்டுக்காயம்

புங்கன் இலையை பச்சையாக அரைத்து வைத்துக் கட்டினாலும் வெட்டுக் காயம் விரைவில் ஆறும்.

வீக்கம்

புங்கன் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கத்தின் மீது வைத்து கட்டி வர வீக்கம் குறையும்

குங்கிலியம்

 குங்கிலியம்






குங்கிலியம் அல்லது சால் ஒரு மருத்துவ மூலிகையாகும். 
அறிவியல் பெயர்: Shorea robusta
மயிலிறகு

மயிலிறகு

 மயிலிறகு




மயிலிறகு பரிகாரமாய் மட்டுமல்லாமல், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. அதுவும் இதனை வீட்டின் சுவற்றில் வைத்தால், பல்லிகள் மற்றும் இதர பூச்சிகள் வருவதைத் தடுக்கலாம்.

பணம் மற்றும் நகை வைக்கும் அலமாரியில் ஒரு மயில் இறகை வைத்தால் அந்த அலமாரியில் செல்வம் அதிகம் சேர்வதோடு, அது நிலைத்து நிற்கும்.

வீட்டில் யாராவது வந்து போனால் சிலவேளைகளில் பயமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் மயில் இறகை வீட்டின் முன் வைப்பதால் வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும்.

திருமணமான தம்பதியர்கள், தங்களின் படுக்கை அறையில் மயில் இறகை வைத்திருப்பதன் மூலம், தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, அன்யோன்யம் மற்றும் புரிதல் அதிகரிக்கும்.
வேம்பு அல்லது வேப்பை

வேம்பு அல்லது வேப்பை

 வேம்பு அல்லது வேப்பை


வேப்ப மரம் நன்றாக வளர்ந்து நிழல் தர வல்லது. அதன் இலைகள் கிருமிகளை அழிக்கும் அல்லது அணுகவிடா தன்மை கொண்டவை.

பல்வேறு தோல் மற்றும் முடி பிரச்சனைகளுக்கு நல்ல ஒரு இயற்கை தீர்வாக உள்ளது. முடி, தோல் பிரச்சனைகளுக்காக உள்ள பல மருத்துகளில் வேம்பு தான் முக்கியமான மூலப்பொருள் ஆகும்.

  • நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால், கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுபடுத்த கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும் என்று ஆயுர்வேத மருத்துர்கள் நம்புகின்றனர். இது நமது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் கொரோனோ நோய்த்தொற்றிலிருந்து விரைவாக மீளவும், வராமல் தடுக்கவும் கண்டிப்பாக உதவும்.

  • தோலில் வேப்ப எண்ணெயைப் தேய்ப்பதால் கொசுகடியிலிருந்து தப்பிக்கலாம் அதுமட்டுமல்லாமல் வீடுகளில் வேப்ப இலைகளை எரித்தால் கொசுக்கள் ஓடிவிடும்.
  • வேப்ப இலைகளை மென்று சாப்பிடுவதால் ஈறு பிரச்சனைகள் , பல் சொத்தை மற்றும் வாய் துர்நாற்றம் என எல்லாம் சரியாகும்.
  • வேப்ப இலைகளில் தயாரிக்கப்பட்ட டீ குடித்தால் சளி, காய்ச்சல் போன்ற நோய்களுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Labels

Sep September Oct October Sept Aug August July ஆவாரம் பூ ஓமம் சுக்கு திப்பிலி துளசி கொன்றைபட்டை நாவல் பட்டை #jan #january ஆஸ்துமா கடுக்காய் நீரிழிவு #laugh Nov ஆண்மை பெருக இஞ்சி இருமல் கண்டங்கத்திரி கிராம்பு கீழாநெல்லி குப்பைமேனி சளி சீயக்காய் தான்றிக்காய் தேன் நெல்லிக்காய் பனங்கல்கண்டு பல் வலி பூண்டு மஞ்சள் மருதம் மிளகு முடக்கத்தான் முடி உதிர்வதைத் தடுக்க மூட்டு வலி # World Braille Day #Happy #Happynewyear2021 #New year #OrphansDay #WorldWarOrphansDay #australiaday #happy new year #happymakarsankranti #happypongal #laughterday #lohri #may #republicday #worldlaughday 17 Ambedkar Remembrance Asteroid Day Dec Diwali Wishes to All Environment Day Father’s Day Happy Diwali to All Images January July 17 Jun Third Sunday June 3rd sunday Messages Mudakathan Mudakathan Keerai Olympic Day Photos about Diwali. Pictures Quotes Status Tamil New year Vadanarayanan Widow’s Day Yoga Day consumer jan newyear2021 tsunami ugadi vegan day youthday அக்கரகாரம் அசோகப்பட்டை அசோகு அதிமதுரம் அத்திப்பட்டை அமுக்குரான் அருகம்புல் அருகு அறுகு அல்சர் அவுரி அஸ்வகந்தா ஆடாதோடை ஆண்மை ஆமணக்கு ஆறாத புண்கள் இக்குரம் இடுப்பு வலி இலந்தைப்பழம் ஈரல் பலம் எட்டி எலுமிச்சை எலும்புருக்கி எள் எள்ளெண்ணை ஏலக்காய் ஏலம் ஓரிதழ் தாமரை கடுகு கரிசலாங்கண்ணி கருத்தடை கருவேலம் கற்பூரம் கல்யாண முருங்கை கல்லடைப்பு கழற்சிவிதை காகண்டம் காசினி கீரை காணாக் கடி விஷம் காதுவலி காராமணி கார்போகி குங்கிலியம் குங்குமப்பூ கொசுக்களை விரட்ட சளித்தொல்லை சித்தரத்தை சிறியாநங்கை சிறுகண்பீளை சிறுசெருப்படை சீந்திலுப்பு சீந்தில் கொடி சீமையகத்தி சீரகம் சுக்குட்டிக் கீரை சுண்டைக்காய் சூலை நோய்கள் செவ்வரளி சோற்றுக் கற்றாழை ஜலதோஷம் ஜாதிக்காய் ஞாபக சக்தி தலைசுற்றல் தலைவலி தாமரைப்பூ திருநீற்றுப் பச்சிலை துத்திக் கீரை தும்பை தூதுவளை தேங்காய் எண்ணெய் தொண்டைப்புண் நந்தியாவட்டை நரம்புத்தளர்ச்சி நல்லெண்ணெய் நாயுருவி நாவல் நிதகம் நிலப்பனை நிலவேம்பு நீரடைப்பு நீர்முள்ளி நீலி நீலி நெல்லி நுரையீரல் புற்றுநோய் நெல்லி நெல்லிக் கனி நெல்லிமுள்ளி நொச்சி பக்கவாதம் பச்சைக் கற்பூரம் படர் தாமரை படர்தாமரை பனங்கற்கண்டு பப்பாளி பல்வலி பிரண்டை புங்கன் பூனைக்காலி பூவரசு பேன் தொல்லை மஞ்சள் காமாலை மணத்தக்காளி மன அழுத்தம் மயிலிறகு மருதாணி மருள் மலமிளக்கி மாதுளம் முசுமுசுக்கை முடக்கறுத்தான் முடக்குவாதம் முடவாட்டுக்கால் முருங்கை முருங்கை பூ மூக்கிரட்டை மூச்சுத்திணறல் ரத்தசுத்தி வசம்பு வல்லாரை வாதநாராயணன் விரைவீக்கம் வெட்டிவேர் வெட்டுக்காயம் வெண் குஷ்டம் வெண்குஷ்டம் வெண்புள்ளி வெண்பூசனை வெந்தயம் வெல்லம் வெள்ளைப்படுதல் வேப்பை வேம்பு

Facebook